கோரக்‍பூர் அரசு மருத்துவமனையில் ஆக்‍சிஜன் பற்றாக்‍குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் - மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்‍குப்பதிவு

Aug 23 2017 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட உத்தரபிரதேச அரசு, மருத்துவமனை முதல்வர் மிஸ்ராவை சஸ்பெண்ட் செய்தது. அதேபோல், கோரக்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த குழந்தைகள் சிறப்பு மருத்துவரான கபீல் கான் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை செயலாளர் ராஜீவ் குமார் தலைமையிலான உயர்மட்ட குழு கடந்த 20ம் தேதியன்று அறிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில், 70 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக கோராக்பூர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00