மேற்கு வங்க மாநிலத்தில் கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைப்பது குறித்து வரும் 29-ம் தேதி விவாதிக்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
Aug 23 2017 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்க மாநிலத்தில் கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைப்பது குறித்து வரும் 29-ம் தேதி விவாதிக்க தயாராக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு மாநிலத்தில் டார்ஜிலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து கூர்காலாந்து என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி கூர்கா ஜன் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் டார்ஜிலிங் பகுதிகளில் இரண்டரை மாதங்களுக்கு மேலாக முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கூர்கா தேசிய விடுதலை முன்னணி விடுத்த கோரிக்கையை அடுத்து, வரும் 29-ம் தேதியன்று, கூர்காலாந்து பிரச்சனை குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.