ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தானிடம் இருந்து ஹவாலா பணம் பெற்றதாக பிரிவினைவாதத் தலைவர் Shabbir Shah மீது குற்றப்பத்திக்கை தாக்கல்
Sep 23 2017 8:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை ஊக்குவிக்க, பாகிஸ்தானிடம் இருந்து ஹவாலா பணம் பெற்றதாக, பிரிவினைவாதத் தலைவர் Shabbir Shah மீது குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் Shabbir Shah, கடந்த ஜூலை 25-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் தாக்குதல் சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத் தலைவர் Hafiz Saeed உடன் Shabbir Shah பேசிய தொலைபேசி உரையாடல்களின் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை அவர் மீது குற்றப்பத்திக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரவாதத்தை ஊக்குவிக்க, Hafiz-யிடம் இருந்து Shabbir Shah மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஹவாலா மூலம் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.