இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது - சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப் தகவல்
Oct 16 2017 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பொருளாதாரம் தற்போது சீரான வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப் தலைவர் லாகர்தி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு மற்றும் அண்மையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்றவற்றால், இந்தியாவின் பொருளாதாரம் தடை பட்டிருப்பதாக பல்வேறு தரப்பிலும் கருத்துகள் நிலவி வருகின்றன. கடந்த வாரம் இதுகுறித்த ஆய்வறிக்கை வெளியிட்ட ஐ.எம்.எஃப். அமைப்பு கூட, இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.எம்.எஃப். தலைவர் லாகர்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்றவை இந்திய பொருளாதாரத்தை சற்று மந்த நிலைக்கு கொண்டுசென்ற போதிலும், மத்திய கால மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது எதிர்பார்த்ததைவிட குறைவாக உள்ள போதிலும், அடுத்த ஆண்டு 7 புள்ளி 4 சதவீதம் என்ற அளவுக்கு வளர்ச்சியடையும் என்றும் கூறியுள்ளார். இது சீனாவின் 6 புள்ளி 5 சதவீத வளர்ச்சியை விட கூடுதலாகும். மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலனாக மத்திய கால கண்ணோட்டத்தில் இந்திய பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது.