மும்பையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Oct 16 2017 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், அங்கு மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. கனமழை எதிரொலியால் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தொடர்ந்து ரயில் நிலையத்திலேயே தங்கும் நிலைமையும் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றும் நகரத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தீபாவளி பண்டிகைக்காக துணி மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில் நகரத்தில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.