ஜம்மு-காஷ்மீரில் போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை : தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் - காவலர் ஒருவர் வீரமரணம்
Oct 17 2017 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சண்டையில் காவலர் ஒருவர் வீரமரணமடைந்தார்.
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வழியாக ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவத்தினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Shopian மாவட்டத்தில் உள்ள Imam Sahib பகுதியில் போலீசார் சென்ற வாகனம் மீதுதீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைதொடர்ந்து இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சண்டையில் காவலர் ஒருவர் வீரமரணமடைந்தார். தப்பியோடிய தீவிரவாதிகள் தேடும் பணி நடைபெற்று வருகிறது.