பெங்களூருவில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழை : 16 பேர் உயிரிழந்துள்ளனர்
Oct 17 2017 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில், கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. மழையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக 4 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் சராசரியாக ஒரு ஆண்டில் 980 மில்லி மீட்டர் மழை பெய்வது வழக்கம். கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கனமழை பெய்துள்ளதால், இயல்புநிலை முற்றிலும் முடங்கியுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிஇதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.