மஹாராஷ்டிராவில் 3-வது நாளாக தொடரும் பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் : பயணிகள் பெரும் அவதி
Oct 19 2017 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிராவில் 3வது நாளாக தொடரும் பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி மஹாராஷ்டிரா முழுவதும் கடந்த 16ம் தேதிமுதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் அம்மாநில மக்கள் பரிதவித்தனர்.
விடிய விடிய பேருந்து நிலையங்களிலேயே பயணிகள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. இப்போராட்டம் 3வது நாளாக இன்றும் நீடிப்பதால் மாநிலத்தில் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது.
இதனிடையே போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாகப் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.