ஜம்மு-காஷ்மீரின் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் கையெறி குண்டு வீச்சால் அதிர்ச்சி

Oct 20 2017 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரின் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. இஜாஸ் அகமது மிர் வீட்டில் கையெறி குண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ வாக இருப்பவர் இஜாஸ் அகமது மிர். இவரது வீடு ஷோபியான் மாவட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை அவரது இல்லத்தில் தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டுகள் வீசியதாகக் கூறப்படுகிறது. வீட்டின் சுற்றுச்சுவர் மீது பட்டு கையெறி குண்டு வெடித்ததால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கையெறி குண்டு வீசப்பட்டபோது எம்.எல்.ஏ வீட்டில் இல்லை.

இஜாஸ் அகமது மிர் தெற்கு காஷ்மீரின் வாசி தொகுதி எம் எல் ஏ என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ வீட்டில் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 வயது சிறுமி ஒருவரும் அடங்கும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00