உத்தரப்பிரதேசத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 நோட்டுகள் பறிமுதல் : 10 பேர் கைது
Jan 17 2018 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு அமைப்பினர், 100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், பணத்தை மாற்றித்தருவதாகக் கூறிய இடைத்தரகர் உள்பட 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாக கூறிய போலீசார், பணத்தின் மதிப்பு 100 கோடிக்கும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.