அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்
Jan 20 2018 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஸ்ஸாம் மாநிலம் Kok rajhar மாவட்டத்தில், இன்று அதிகாலை, 5 புள்ளி 2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. Gauripur நகரை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அதிகாலை வேளையில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேத விவரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அஸ்ஸாமில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டை நாடானா பூட்டானிலும் உணரப்பட்டது.