பிரதமர் நரேந்திர மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் - மராட்டிய நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே வலியுறுத்தல் - அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மோடி இல்லாத அரசு உருவாகுமானால் அதுவே இந்தியாவுக்கு கிடைக்கும் 3வது சுதந்திரமாக இருக்கும் என்றும் கருத்து
Mar 19 2018 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் நரேந்திர மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்ற நவ நிர்மான் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திரு. ராஜ் தாக்ரே, பிரதமர் திரு. நரேந்திர மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், பிரதமர் திரு. மோடியும் அவரது தலைமையிலான பாரதிய ஜனதா அரசும் அளித்தும் வரும் தவறான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் ராஜ் தாக்ரே குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் நாடு சுதந்திரம் அடைந்த நாள்முதல் நடைபெற்றுள்ள ஊழல்களிலேயே அது தான் மிகப்பெரும் மோசடியாக இருக்கும் என்றும் ராஜ் தாக்ரே குறிப்பிட்டார்.