ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை - சோபியான், அனந்தநாக் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Apr 11 2018 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் மறைந்துள்ள தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள குத்வானி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றிவளைத்தனர். இதனைதொடர்ந்து தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினர் வளையத்தில் 3 தீவிரவாதிகள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே சோபியான், அனந்தநாக் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.