சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியை வேறு வகையில் பயன்படுத்தி அரசாங்கம் தங்களை ஏமாற்றுவதா? : உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை
Apr 11 2018 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்றத்தில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் காற்று மாசு பிரச்சினை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் விசாரித்தனர். அப்போதைய விவாதத்தின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நிதி எந்த நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை விட்டு பிறவகையில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெளிவாக தெரிவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் மீது நீதிமன்றம் நம்பிக்கை வைத்திருந்ததாகவும், ஆனால் அரசு தனது விருப்பம்போல் செயல்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் இந்த செயல் மிகப்பெரும் நம்பிக்கை துரோகம் என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.