இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவை எதிர்த்து, கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு - விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
Apr 12 2018 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவை எதிர்த்து, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா மற்றும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு
விசாரணையை வரும் 17ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில், கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா மற்றும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., ஆகியோர் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பழனிசாமி தரப்பினர் போலி ஆவணங்களை வைத்து மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இதுகுறித்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரட்டை இலை சின்னம் ஒருதலைபட்சமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பழனிசாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 17ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.