சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூருக்கு எதிராக டெல்லி போலீசார் குற்றச்சாட்டு பதிவு - நீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் எனத் தகவல்
Apr 14 2018 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரது கணவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூருக்கு எதிராக டெல்லி போலீசார் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
2014-ம; ஆண்டு டெல்லியில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயரிழந்தார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் அவரது ரத்த மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள தடயவியல் துறைக்கு டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த விசாரணை அறிக்கையை இன்னும் ஒரு வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் டெல்லி போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில் சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியது, ஆதாரங்களை அழித்தது என 2 பிரிவுகளில் சசிதரூர் மீது குற்றாச்சாட்டினை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். சசிதரூர் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.