முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறித்து 4 மாநில முதலமைச்சர்கள் நேரில் கேட்டறிந்தனர்

Jun 17 2018 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாயின் உடல்நிலை குறித்து, நான்கு மாநில முதலமைச்சர்கள் நேரில் கேட்டறிந்தனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கடந்த 11-ம் தேதி முதல், முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டபோதிலும், அவசர சிகிச்சைப் பிரிவிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் நீதி ஆயோக் நிர்வாக கவுன்சில் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, பீஹார் முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார், சத்தீஷ்கர் முதலமைச்சர் திரு. ரமண்சிங், ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு. ரகுவர் தாஸ் ஆகியோர், எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று திரு. வாஜ்பாயின் உடலைநிலை குறித்து, மருத்துவர்களிடமும், உறவினர்களிடமும் கேட்டறிந்தனர். 1999-ம் ஆண்டு மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட திரு. வாஜ்பாய், 2004-ம் ஆண்டுவரை அந்தப் பதவி வகித்தார். உடல்நிலை பாதிக்கப்படவே, தீவிர அரசியலில் இருந்தும், பொது வாழ்க்கையில் இருந்தும் அவர் ஒதுங்கியிருந்து வந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00