எதிர்க்கட்சி முதலமைச்சர்களை சந்திக்க மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் - மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பதாக குற்றச்சாட்டு
Jun 23 2018 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதலைச்சர்களை சந்திக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தவிர்த்து வருவதாகவும், எதிர் கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக, புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில், மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, பிரதமரை தான் 5 முறை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கவில்லை என்றும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.