மத்தியப் பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள்
Jul 13 2018 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப் பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் தற்போது வெளியாகி வேகமாக பறவி வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் தற்போது பெய்துவரும் கனமழையால் ஆறுகளில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு Damoh என்ற இடத்தில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பாலத்தின்மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்பாலத்தை இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கடக்க முயன்றபோது அவர் வெள்ளத்தில் வாகனத்துடன் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பின்னர் உள்ளூர் மக்கள் அவரையும் இரு சக்கர வாகத்தையும் பத்திரமாகமீட்டுள்ளனர்.