Me Too புகாரில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு - எம்.ஜே.அக்பரின் வாக்குமூலத்தை வரும் 30-ம் தேதி பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
Oct 18 2018 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள எம்.ஜே அக்பர் தொடுத்த அவதூறு வழக்கு விசாரணை, வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர் தெரிவித்த பாலியல் புகார் காரணமாக கடுமையான நெருக்கடிக்கு ஆளான எம்.ஜெ அக்பர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது அக்பர் டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 40 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பிரியா ரமணியின் புகார் அமைந்துவிட்டதாக தனது மனுவில் எம்.ஜெ அக்பர் குறிப்பிட்டிருந்தார். வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், வரும் 31-ம் தேதி அக்பரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய உத்தரவிட்டு அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தது.