நாட்டில் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை - மத்திய அரசுக்கு எதிராக வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு
Oct 22 2018 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக உயர்த்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியைப் பொருத்து விலை மாறுபடுகிறது. பொதுவாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை சற்று குறைவாக உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ஒடிசாவில் பெட்ரோலை விட டீசல் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 80 ரூபாய் 65-காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, அதாவது 80 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 32 காசுகள் குறைந்து லிட்டருக்கு 84 ரூபாய் 64 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் 29 காசுகள் குறைந்து லிட்டருக்கு 79 ரூபாய் 22 காசுகளாகவும் விற்பனையாகிறது.