சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் : விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் நாளை முடிவு
Oct 22 2018 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது எப்போது விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் நாளை அறிவிக்க உள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. கோவில் நடை திறந்தபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், சபரிமலை தொடர்பான இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 19 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.