தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26, 27-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Oct 23 2018 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26, 27-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மற்றும் அதனையொட்டிய கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், அதே நேரத்தில் வரும் 26, 27ம் தேதிகளில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரம், வானூரில் தலா 9 சென்டிமீட்டரும், ஆனைக்காரன் சத்திரம் 8 சென்டிமீட்டர், மரக்காணம், பேச்சிப்பாறை, சத்தியமங்கலத்தில் தலா 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.