ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சல் : 40 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு
Jan 18 2019 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுவரை 40 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது. ஜெய்ப்பூர், ஜோத்பூர் நகரங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஜோத்பூரில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரே நாளில் 65 பேர் பன்றிக்காய்ச்சால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஆயிரத்து 36 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.