பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாத பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் முயற்சி - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கு தடை விதிக்க மீண்டும் நடவடிக்கை
Feb 20 2019 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாத பட்டியலில் சேர்க்கவும் அவருடைய அமைப்பிற்கு தடை விதிக்கவும் பிரான்ஸ் மீண்டும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து , சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. அந்தக் கவுன்சிலில், வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முயன்று வருகிறது. ஆனால் அதற்கு சாதகமான சூழ்நிலை தென்படவில்லை. இந்த சூழலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை சீனா தடுத்து வருகிறது.
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டையாக உள்ளது.
இந்நிலையில் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் பிரான்ஸ் முன்னெடுத்துள்ளது. பிரான்ஸ் இரண்டாவது முறையாக இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது.