மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கடும் அதிருப்தி
Mar 25 2019 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் பா.ஜ.க. மூத்த தலைவர் திரு. அத்வானி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் துணை பிரதமராக இருந்த, 91 வயதாகும் திரு. அத்வானி, திரு. மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பா.ஜ.க.வில் ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
திரு. அத்வானி, தற்போது, குஜராத் மாநிலத்தின் காந்திநகர் எம்.பி.,யாக இருந்து வருகிறார். 6-வது முறையாக அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. காந்திநகர் தொகுதிக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் திரு. அமித்ஷா, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது ஒரு விஷயமே இல்லை என்றும், ஆனால், வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு முன் எந்த பா.ஜ.க. தலைவரும் தன்னை தொடர்பு கொண்டு பேசாமல் அவமதித்ததை, ஏற்றக்கொள்ள முடியவில்லை என்றும், தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி அத்வானி வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.