ஆந்திர மாநிலத்தில், சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியே வெற்றி பெறும் - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதி
May 20 2019 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலத்தில், சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், தமது தெலுங்கு தேசம் கட்சியே வெற்றி பெறும் என்றும், அதில் ஆயிரம் சதவீதம் நம்பிக்கை இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில், மக்களவை தேர்தலுடன், அம்மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. மக்களவை தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் நேற்று முடிவடைந்த நிலையில், மாலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. ஆந்திராவில், தற்போதைய முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு, ஆட்சியை இழப்பார் என்றும், ஒய்.எஸ்.ஆர். காங்கிஸ் கட்சியின் திரு.ஜெகன் மோகன் ரெட்டி, பெரும் மெஜாரிட்டியுடன் முதல்வராவார் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், தமது தெலுங்கு தேசம் கட்சியே வெற்றி பெறும் என்றும், அதில் ஆயிரம் சதவீதம் நம்பிக்கை இருப்பதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.