தேர்தல் தோல்விக்‍கு பொறுப்பேற்பதாக மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவிப்பு - எதிர்க்‍கட்சிகள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் என கருத்து

May 24 2019 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்‍கு பொறுப்பேற்றுக்‍ கொள்வதாக மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்‍களவைத் தேர்தலில், மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1952ம் ஆண்டுக்‍குப் பிறகு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

டெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த திரு. யெச்சூரி, இந்தத் தேர்தலில் தங்கள் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தான் இதற்கு பொறுப்பேற்பதாகவும் கூறினார்.

தேர்தலில் மக்‍கள் பாரதிய ஜனதா கட்சிக்‍கு ஆதரவாக ஒரு உறுதியான முடிவை வழங்கியிருப்பதாக குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்‍கட்சிகளும் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய தருணம் இது என்றும் திரு. சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00