மக்களின் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டி - கட்சியினர் கவலைப்பட வேண்டாம் - போராடி வெல்வோம் என ஆறுதல்
May 24 2019 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், மீண்டும் போரிட்டு வெல்வோம் என்றும் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திரு.ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்களைதெரிவித்தார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என குறிப்பிட்ட திரு. ராகுல்காந்தி, மக்கள் தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை என்றும், ஒரு இந்தியனாக அதனை மதிப்பதாகவும் தெரிவித்தார்.
பாரதிய ஜனதாவின் கொள்கைக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், திரு.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.