ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் - மும்பை பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 435 புள்ளிகளில் நிறைவு
May 24 2019 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும்மேல் உயர்ந்து 39 ஆயிரத்து 435 புள்ளிகளில் நிறைவுபெற்றது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானபோது அதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டி 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.
தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து, 39 ஆயிரத்து 435 புள்ளிகளில் நிறைவுபெற்றது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 844 புள்ளிகளில் முடிவடைந்தது.
இதனிடையே, அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 புள்ளி 81 காசுகளாக இருந்தன.