புதுச்சேரிக்கான உரிமைகள், நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவோம் : வைத்திலிங்கம் பேட்டி
May 24 2019 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரிக்கான உரிமைகளையும், தேவையான நிதியையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தருவோம் என, புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திரு.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான திரு.அருணிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திரு.வைத்திலிங்கம் பெற்றார். வெற்றி பெற்ற வைத்திலிங்கத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி, அமைச்சர் திரு.நமச்சிவாயம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு.சஞ்சய்தத் ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, திரு.வைத்திலிங்கம், புதுச்சேரிக்கான உரிமைகளையும், தேவையான நிதியையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இதனிடையே கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.பொன்.ராதாகிருஷ்ணனை 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் திரு.வசந்தகுமார், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியான திரு.பிரசாந்த் மு. வடநேரேவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.