13 பேருடன் மாயமான ஏ.என்.32 ரக விமான பாகங்கள் - அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தகவல்
Jun 11 2019 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த 3-ம் தேதி மாயமான ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று, விமானப்படை அதிகாரிகள், ஊழியர்கள் என 13 பேருடன் கடந்த 3-ம் தேதி மாயமானது. அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்ட விமானம், சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தின் மீது பறந்தபோது மாயமானது. பறக்கத்தொடங்கிய 33 நிமிடத்தில், விமானம், ரேடார் சமிக்ஞையில் இருந்து விலகியது. உடனடியாக விமானத்தை தேடும் பணிகள் தொடங்கின. 9 நாட்களாக தேடுதல் பணி நடைபெற்றுவந்த நிலையில், மாயமான விமானத்தின் பாகங்கள், அருணாச்சலப் பிரதேசத்தின் லிபோ நகருக்கு வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ள இந்திய விமானப்படை, நிலப்பரப்பில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.