2019-2020 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Aug 22 2019 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2019 - 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு நீட் தேர்வு, மே 3ம் தேதி நடைபெறும் என்றும், முடிவுகள் ஜூன் 4-ல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 14 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர். அதில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றனர்.