ஐ.ஆர்.சி.டி.சி.,யின் 2 கோடி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு - பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்க உள்ளன
Aug 23 2019 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி'யிடம் விண்ணப்பித்து உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின், 10 ரூபாய் முகமதிப்பு உள்ள 2 கோடி பங்குகளை விற்பனை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 500 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
'ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் அண்டு செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், யெஸ் செக்யூரிட்டீஸ்' ஆகியவை, பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்க உள்ளன. பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கிடைத்தவுடன், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் புதிய பங்குகள், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.