இந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண்கள் மஹாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழக பேருந்தின் ஓட்டுநர் பணிக்கு தேர்வு
Aug 24 2019 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய செய்ய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கிய திட்டம், பழங்குடியின பெண்களுக்கு கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு வழங்குவது ஆகும். அதன்படி, சமீபத்தில் அம்மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், 163 பழங்குடியின பெண்களை தேர்வு செய்துள்ளது. போக்குவரத்து கழகத்தின் சார்பில் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு, அதன்பின்னர் அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.