பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவில் சேதம் - வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக்‍குழுவை அனுப்ப முதலமைச்சர் அமரீந்தர்சிங் கோரிக்‍கை

Aug 25 2019 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் மாநிலத்தில், கன மழை காரணமாக, ஆயிரத்து 700 ‍கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட, மத்தியக் குழுவை மத்திய அரசு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் திரு. அமரீந்தர் சிங் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

கேரளா, உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில், மத்தியக் குழு, விரைவில், வெள்ளச் சேதங்களை பார்வையிட உள்ளது. இதில், பஞ்சாப் இடம் பெறவில்லை. இது குறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, பஞ்சாப் முதலமைச்சர் திரு. அமரீந்தர் சிங் கூறுகையில், கன மழையால், மாநிலத்தில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், வெள்ள சிறப்பு நிவாரண நிதியாக, ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர் பேசுகையில், வெள்ள‌த்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில், பஞ்சாப் இடம் பெறாதது, அதிர்ச்சி அளிப்பதாகவும், மாநிலத்தில் வெள்ளப் பாதிப்புகளை கணக்கிட, உடனடியாக மத்தியக் குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00