காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை
Aug 26 2019 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநில தலைமை செயலகத்தில் பறக்க விடப்பட்ட அம்மாநில கொடி அகற்றப்பட்டு, மூவர்ணக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துப்படி, மூவர்ணக்கொடியுடன், அம்மாநிலத்திற்கென்று தனிக்கொடியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது, ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலக கட்டடத்தில் பறக்க விடப்பட்ட மாநில கொடியை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். மாநிலத்திலுள்ள மற்ற அலுவலகங்களிலும், மாநிலக்கொடி விரைவில் அகற்றப் படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.