அயோத்தி வழக்கை நேரலை செய்ய சம்மதம்-உச்சநீதிமன்றம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதிவாளருக்கு உத்தரவு
Sep 17 2019 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி வழக்கை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரத்தை, அமைதியான முறையில் பேசித் தீர்க்க அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் முதல் நாள் தோறும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், அயோத்தி வழக்கின் விசாரணையை, வீடியோ பதிவு செய்ய வேண்டும், தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடந்தது. தொடர்ந்து அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சம்மதம் தெரிவித்தது. மேலும், அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு, எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, உச்சநீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.