பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு : வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் கல்யாண்சிங்கிற்கு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு

Sep 22 2019 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், வரும் 27 ஆம் ‍தேதி ‍நேரில் ஆஜராகும்படி, ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் திரு. கல்யாண் சிங்கிற்கு சி.பி.ஐ., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக, திரு. கல்யாண் சிங் இருந்த போதுதான், அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, திரு. கல்யாண் சிங், பா.ஜ.க, மூத்த தலைவர்கள், திரு. அத்வானி, திரு. முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ராஜஸ்தான் மாநில ஆளுநராக, திரு. கல்யாண் சிங் நியமிக்கப்பட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன், திரு. கல்யாண் சிங்கின் ஐந்தாண்டு பதவிக் காலம் முடிவடைந்தது. இதையடுத்து, அவர் மீண்டும், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், அண்மையில், சி.பி.ஐ., அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்த வழக்கில், வரும் 27 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, திரு. கல்யாண் சிங்கிற்கு, சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00