பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வரும் 26, 27 தேதிகளில் வேலை நிறுத்தம் : அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
Sep 22 2019 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வரும் 26 மற்றும் 27 தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன், வங்கி இணைப்பினால் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார். தங்கள் கோரிக்கைளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் நவம்பர் மாதத்திலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.