டெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்க போலீஸ் தீவிரம்
Sep 22 2019 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில், அக் ஷர்தம் கோவில் அருகே, போலீசார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியால் பெரும் பதற்றம் நிலவியது. எனினும், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தலைநகர் டில்லியில், பண்டவ் என்ற நகரில், புகழ்பெற்ற அக் ஷர்தம் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே, இன்று காலை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்த முயற்சித்தனர்.
அப்போது காரில் இருந்த 4 பேர் அடங்கிய அடையாளம் தெரியாத மர்ம கும்பல், போலீசார் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்பின், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில், டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.