வாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்விஜய் சிங் வலியுறுத்தல்
Sep 23 2019 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹேக்கர்களை அழைத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறாது என்பதை தலைமை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில், அடுத்த மாதம் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநில எதிர்க்கட்சிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லாததால், வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு. திக்விஜய் சிங், டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து கட்சிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை என்றும், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திரானி இருந்தால், சிறந்த ஹேக்கர்களை அழைத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.