டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தை சந்தித்தார் சோனியா காந்தி - மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் சந்தித்தனர்
Sep 23 2019 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரு. ப. சிதம்பரத்தை, காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்தித்தார்.
ஐ.என்.எக்ஸ்., மீடியா சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரத்தை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திரு. குலாம்நபி ஆசாத், திரு. அகமது படேல், திரு. கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் அண்மையில் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் இன்று, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் ஆகியோர், திகார் சிறையில், திரு.ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர். இவர்களுடன், கார்த்தி சிதம்பரமும் சென்றார். அப்போது, முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.