ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விளக்கமனு தாக்கல்
Sep 23 2019 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விளக்கமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜாமின் கோரி ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததால், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் விளக்கமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் தன் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும், இந்த வழக்கில் பொதுமக்களின் பணம் சம்மந்தப்படவில்லை என்பதால் இது வங்கி மோசடியின் கீழ் வராது என்றும் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் பொறுப்புமிக்க குடிமகன் என்றும், ஜாமின் கிடைத்தாலும் நாட்டை விட்டு எங்கேயும் செல்ல மாட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.