குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் புகழாரம்
Oct 15 2019 2:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு. மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலாமிற்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் 21ம் நூற்றாண்டு குறித்து கனவு கண்டவர் அப்துல் கலாம் என தெரிவித்துள்ளார். கலாமிற்கு நாடு தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு.மோடி, அவரின் சாதனைகள் குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
எளிமை மற்றும் அறிவின் மறுவடிமாக இருந்த கலாம், தனது வாழ்நாள் முழுவதையும் தேசத்திற்காக அர்ப்பணித்தவர் என மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா நினைவு கூர்ந்துள்ளார்.
குடியரசு முன்னாள் தலைவர் மற்றும் விஞ்ஞானியான கலாமை, அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வதாகவும், அவர், இந்திய மக்களின் இதயத்திலும், எண்ணத்திலும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மக்கள் குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர் அப்துல் கலாம் என்று, மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாரத் ரத்னா கலாமிற்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துவதாக மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.