மகாராஷ்ட்ராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் : உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிவசேனா முடிவு
Nov 13 2019 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்ட்ராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிவசேனா முடிவு செய்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை சுட்டிக்காட்டிய திரு.உத்தவ் ராக்கரே, தங்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தபோது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக, 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டும், ஆனால் 24 மணி நேரம் மட்டுமே அனுமதித்ததாகவும் தெரிவித்தார். பா.ஜ.க.வுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தபோதும், தற்போது வேறுவழியின்றி காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை அணுக வேண்டியிருப்பதாகவும் கூறினார்.
பா.ஜ.க.வுடனான கூட்டணி முற்றிலும் முறிந்துவிட்டதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திரு.உத்தவ் தாக்கரே, இதுகுறித்து அவசரப்பட வேண்டாம் என்றும், இது அரசியல் என்றும் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் மேலும் 6 மாத காலம் அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தார். தாங்கள் பி.ஜே.பி.யுடனான கூட்டணியில் இருந்து விலகவில்லை என்றும், அவர்கள்தான் அந்த முடிவை மேற்கொண்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் மகாராஷ்ட்ராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிவசேனா முடிவு செய்துள்ளது.