டெல்லியில் மிக மோசமான நிலையை எட்டியுள்ள காற்று மாசு : காற்றின் தரக்குறியீட்டு எண் 500-ஐ தொட்டது
Nov 14 2019 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது.
இன்று காலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலின்படி, லோதி சாலை பகுதியில் மாசுக் காரணிகளான PM 2.5 மற்றும் PM 10 ஆகியவற்றின் தரக்குறியீட்டு எண் 500-ஆக பதிவாகியிருந்தது. இது காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதைக் குறிப்பதாகும். தரக்குறியீட்டு எண் 50-ற்குள் இருந்தால் மட்டுமே சுவாசிக்க ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நகரின் பல்வேறு பகுதிகளிலும், புகைமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.