ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்துவந்த காங்கிரசும், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்
Nov 14 2019 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், நாட்டு மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்துவந்த காங்கிரசும், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இன்று தள்ளுபடி செய்தது. ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பா.ஜ.க. வரவேற்றுள்ளது.
மத்திய அரசின் வெளிப்படை தன்மையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும், ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்து ராகுல் காந்தி, நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும், ரஃபேல் விமானங்கள் குறித்து பொய் கூறிய ராகுல், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.