மஹாராஷ்ட்ராவில் சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் என்றால் மதச்சார்பின்மையை அக்கட்சி உறுதிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்
Nov 14 2019 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ராவில் கடந்த 12ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன், சிவசேனா மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக வரும் 17-ம் தேதி காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இந்நிலையில், சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் என்றால், மதச்சார்பின்மையை அக்கட்சி உறுதிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.