ஆந்திராவில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

Nov 14 2019 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திராவில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் திரு.சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பதவியேற்றது முதலே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது ஆந்திர அரசு, மணல் விற்பனை குறித்து கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், இதனால், மாநிலத்தில் மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், மணல் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய ஜெகன்மோகன் ரெட்டியின் அரசை கண்டித்து, முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் கட்சியினர் விஜயவாடாவில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேசிய திரு.சந்திரபாபு நாயுடு, மணல் தட்டுப்பாடு காரணமாக கூலித் தொழிலாளிகள் முதல் தச்சுத் தொழிலாளிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால், கட்டுமானத் தொழிலில் உள்ள 35 லட்சம் தொழிலாளர்களின் வருமானம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00